இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் வரலாற்றில் ஓர் பகுதி .

இமாம் ஷாஃபி இளமை பருவத்திளே கல்வி ஆர்வத்துடன் இமாம் மாலிக்கின் அறிவு சபைகளுக்கு செல்வது வளமை.  ஆனாலும் அவர் வயதில் இளையவர் என்பதால் அங்கு அவர் அனுமதிக்கப்படவில்லை.  ஆனாலும் அவர் இமாம் மாலிகிடம் மார்க்க தீர்ப்புகள் வேண்டி வருபவர்களிடம் இமாம் அவர்களது பதிலை கேட்டுக்கற்றுக் கொள்வார்.

இப்படி இருக்க ஒரு நாள் ஒரு மனிதர் இமாம் மாலிகிடம் ஒரு விடயத்திற்காக தீர்ப்பு வேண்டி வந்தார். அவர் தனது மனைவியிடம் "நீ எனக்கு நிலவை விட ஆழகாக இல்லை எனின் உன்னை விவாகரத்து செய்து விடுவேன்" என்றார்.

அதற்கு இமாம் மாலிக் அவர்கள் "நீ விவாகரத்து செய்தால் எவரும் அழுவதற்கு இல்லை" என்றார்.

குறித்த கேள்விற்கான தீர்ப்பை கேட்டு தெரிந்த பின் இமாம் மாலிகிடம் சென்று இமாம் ஷாஃபி அவர்கள்

"இமாம் அவர்களே!!! அல்லாஹ் மனிதனை மிகவும் அழகான அமைப்பில் படைத்துள்ளதாக கூறுகிறானே" என்று கூறினார்கள் .

அதனை செவியேற்ற இமாம் மாலிக் தனது தீர்ப்பை வாபஸ் வாங்கிக்கொன்டார். மேலும்  " மாலிக் தவறிழைத்தார். ஷாபிஃ சுட்டிக்காட்டினார்" என்றார்.

மேலும் அன்றிலிருந்து இமாம் ஷாபிஃ அவர்கள் இமாம் மாலிக்கின் கல்வி அமர்விற்கு அனுமதிக்கவும் பட்டார்கள். (இது கருத்தடிப்படையிலான தமிழாக்கமே முழுமையான மொழிஅடிப்படையிலான தவிர மொழிபெயர்ப்பு கிடையாது

Afra akram இஸ்லாஹியா வளாகம் வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்