ரமழானுக்காக திட்டமிடுவோம்

விரைவில் ரமழான் வருகின்றது. கொரோனா ஏற்படுத்திய விளைவுகளினால் இரண்டு சவால்கள் எமக்கு முன்னால் உள்ளன.

  1. ரமழானில் ஆன்மிக ரீதியாக சமூகத்தை வழிகாட்டல். ரமழானை முடிந்தவரை பயன்படுத்துதல்.
  2. கொரோனாவிற்குப் பின்னரான சமூகத்தை பொருளாதார ரீதியாக கைகொடுத்து கட்டியெழுப்புதல்.

ஒவ்வொரு ஊரிலுள்ள வளங்களை உச்சகட்டமாக திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் இரண்டு வகை சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். இன்ஷாஅல்லாஹ்.

உதாரணமாக, ரமழானில் நோன்பாளிகள் வழங்கும் பித்ரா (அரிசி மாத்திரமல்ல/அண்ணளவாக 200 ரூபாவிற்கு மேல்) பெறுமதியை ஒவ்வொரு ஊரிலும் ஒன்று திரட்டினால் பல மில்லியன் ரூபாய் திரட்டலாம். அக்கரைப்பற்றில் பித்ரா மாத்திரம் குறைந்தது 50 இலட்சத்திற்கு மேல் திரட்டலாம். சதகா/ ஸகாத் வேறு.

இதய சுத்தியுடன் திட்டமிடலுடன் இயங்கினால் அல்லாஹ்வின் உதவியுடன் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு சாத்தியப்படுத்தலாம். இன்ஷாஅல்லாஹ்.

ஒரு Project ஆக இத்திட்டத்தை செயற்படுத்துவோம். அனைத்து ஊர்களும் சிந்திக்கலாம். நடைமுறைப்படுத்தல், சாத்தியப்பாடுகள் பற்றி கலந்துரையாடலாம்.

எம்.ஐ.ஸாஹிர்
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்