قال شَيْخُ الْإِسْلَامِ ابْنُ تَيْمِيَّةَ -رَحِمَهُ اللَّهُ-:
إنَّ اللَّهَ تَعَالى أَخبَرَ أنَّ جَمِيعَ النَّاسِ خَاسِرُونَ إلَّا مَن كَانَ فِي نَفسِهِ مُؤمِنًا صَالِحًا ، ومَعَ غَيرِهِ مُوصِيًا بِالحَقِّ مُوصِيًا بِالصَّبرِ
(| مَجمُوعُ الفَتَاوَى (١٥٢/٢٨)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: யார் தனது உள்ளத்தில் இறை நம்பிக்கையாளராகவும் நல்லவராகவும் இருந்து, மற்றவருடன் உண்மையை கொண்டும் பொறுமையை கொண்டும் உதவி ஒத்தாசை புரியக்கூடியவராகவும் இருந்தாரோ, அவரை தவிர மனிதர்கள் அனைவரும் நஷ்டவாளிகளாவர் என்று அல்லாஹ் (குர்ஆனில்) கூறிவிட்டான். (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 28, பக்கம்: 152)
قال الإمام ابن القيم -رحمه الله-:
حُسْنُ الظَّنِّ بالله يَنْفَعُ مَنْ تَابَ وَنَدِمَ وَأَقْلَعَ، وَبَدَّلَ السَّيِّئَةَ بِالْحَسَنَةِ، وَاسْتَقْبَلَ بَقِيَّةَ عُمُرِهِ بِالْخَيْرِ وَالطَّاعَةِ .
( الجواب الكافي (٢٧/١)
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: பாவமீள்ச்சி பெற்று கைசேதப்பட்டு (அந்த பாவத்திலிருந்து) கலன்று, பின்பு பாவத்துக்கு பதிலாக நன்மை செய்து தனது எஞ்சிய வாழ்நாளை நலவை கொண்டும் வழிப்பாட்டை கொண்டும் வரவேற்றவருக்கு அல்லாஹ்வை பற்றி நல்லெண்ணம் வைப்பது பயனளிக்கும். (நூல்: அல் ஜவாபுல் காஃபீ, பாகம்: 01, பக்கம்: 27)
கருத்துகள்
கருத்துரையிடுக