சுயநலம்

சிரியாவின் பாலை நிலத்தில்

சிறுவர்களை கொன்று குவிக்கும்போது

ஐ நாவின் கூல் அறையில்

ஐ நாய்கள் சிறுவர் உரிமைக்காக

சிங்காரமிட்டு கூடியது.

நானும் கள்ளன் நீயும் கள்ளன்

பாராளுமன்றத்தில் உளறும்போது

பகல் கொள்ளைக்காக

வட்டாரத்து சிறுவனை

வற்புறுத்தி அடைத்தனர்- சிறையில்

இனவாதிக்கு இரவை ஒதுக்கிவிட்டு

பாராளுவோர் பகலில் கூடினர்

பாரைப் பாதுகாப்போம் – நீதியை

பாரபட்சமின்றி நிறைவேற்றுவோம் – என

பகிடிப் பேச்சுக்களுடன் – பாராளுமன்றத்தில்

மானிடத்தில் அரசுகள் உருவாகின

மாண்டோர் உரிமையை பாதுகாக்க

அரசுகள் இன்று நாடகமாடுது

தன்  சுய நலத்திற்காக

மனிதாபிமானத்தை மயானத்தில் அடக்கிவிட்டு

Ibnuasad

கருத்துகள்