பயிற்றுவிக்கப்பட்ட ஆலிம்களே நாட்டின் இன்றைய தேவையாகும்

உலமாக்களுக்கான பட்டப் பின் பயிற்சி அல்லது கற்கை இறுதியில் விஷேட பயிற்சி (Special Profesaional Training) வழங்குவது  இன்றைய இலங்கைச் சூழலின் அவசியமானாதோர் அம்சமாகும்.

சிறப்புப் பயிற்சி பெற்ற ஆலிம்களால் மாத்திரமே சிறந்தோர் சமூகத்தைச் சிந்திக்க முடியும். பயிற்சியும் மீள் கற்கையும் மாத்திரமே ஆலிம்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் ஆலிம்கள் நாட்டின் புலமைச் சொத்து. இது உறுதி செய்யப்படுவதில் தொடர் பயிற்சியின் பங்களிப்பு மிக முக்கியமானது

எவ்வளவுதான் அறிவைப் பெற்றிருப்பினும் அதை இலங்கைச் சூழலுக்கு சிறப்பாக ஒப்புவிக்கும் ஆற்றலை ( Delivery skills) வழங்குவது  பயிற்சி மாத்திரமே மக்களின் அன்றாட வாழ்வு ஆலிம்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. குத்பாக்கள், விஷேட நிகழ்வுகள் என பல்லாயிரக்கணக்கான மக்களை அடிக்கடி சந்திக்க நேரிடுகின்றது.

மத்ரஸாக்கள் தத்தமது பாடத்திட்டத்தினை விட்டுக் கொடுப்பதில் உள்ள பிரச்சினைகள் அவ்வாறே  இருக்கட்டும். நாட்டில் எந்த மத்ரஸாவிலேனும் கல்வி பயிலட்டும் ஏன் வெளி நாட்டில் கூட கற்கலாம் ஆனால்  இலங்கைச் சூழலுக்கு பயிற்றுவிக்கப்பட  வேண்டும்.

ஆலிம்களுக்கு அடையா அட்டை வழங்குதல்ல பிச்சினை மாறாக உரிமம் (License) வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒழுக்க நெறிகள் வரையறை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தபட வேண்டும். ஏன் மீறும் பட்சத்தில் உரிமத்தை இரத்து செய்ய முடியுமாக வேண்டும்.

உலமா சபை,  கலாசார திணைக்களம் அனைத்து மத்ரசாக்களின் ஒன்றியம் போன்றன இச்செயன்முறையில்  முதன்மை பெற வேண்டும் அத்துடன் அரச அனுமதியையும் பெறப்பட வேண்டும்.

இஸ்லாமிய இயக்கங்கள் இந்த தரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு தேசத்துக்கான இஸ்லாமிய சிந்தனையை வழப்படுத்த வேண்டும். காத்திரமான கந்துரையாடல்கள் மேற் கொள்ளப்பட்டு நிரந்தர தர்மம் செய்யக் காத்திருக்கும் கொடை வள்ளல்களை முன்வர வைக்க வேண்டும். கற்பதனால் மாத்திரம் இலங்கைக்கு சிறந்த சிந்தனையைக் கொடுக்க முடியாது மாறாக பயிற்றுவிக்கப்பட்ட ஆலிம்களாக  செய்ய வேண்டும்.

நோக்கங்களை மையப்படுத்திய ஆலிம்கள் பயிற்றுவிக்கப்படும் போது எமது தாயத்துக்கு தனித்துவமிக்க கலாசாரம் ஒன்று கட்டியெழுபப்பப் பட முடியும்.

கற்றலும் பயிற்சியுமே ஓர் சமூகத்தின் மூல சக்தியாகும். வெறும் ஆலிம்களாக மட்டும் மிம்பர்களில் ஏறுவதை விட சிறப்புப் பயிற்சி பெற்ற ஆலிம்களாக மிமம்பரை அலங்கரிக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகளுக்கப்பால் உலமாக்களூடாக ஒரு புதிய தேசம் செய்வோம்.

உபைதுள்ளாஹ் ஹமீட்

வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்