எனது கருத்து இல்லவே இல்லை என்பதாகும். நாகரீகம் என்ற பெயரிலும் கல்வி கற்கிறோம் என்ற திமிர் வேலை செய்கின்றோம் என்ற நமது இயலும் பெண்கள் உரிமைகள் என்ற வக்கிர புத்தியும் இஸ்லாத்தைப் பற்றியும் அதன் தூய சிந்தனை பற்றியும் இஸ்லாமிய பெண்கள் உரிமை பற்றியும் தவறான கருத்துக்களை பரப்புகின்ற பெண்களை இஸ்லாமும் சமூகமும் அவருடைய கொள்கையையும் தான் மறுக்கிறது.
ஒரு பெண்ணானவள் பெண்ணாக இருக்கும் வரை தான் அவளுக்கு சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் காணப்படுகின்றது. வெட்கம், ஞானம் போன்றவற்றை ஒரு பெண் எப்போது இழக்கிறாலோ அப்போதே அவள் பெண் என்ற அந்தஸ்தை இழந்து விடுகின்றாள்.
எது பெண்ணுரிமை என்பது முதலில் பெண்களுக்கு தெரிய வேண்டும் .அது தெரிய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் இஸ்லாமிய அறிவு அவர்களிடையே காணப்பட வேண்டும்.
இஸ்லாம் எங்கேயுமே பெண்ணுரிமையை பறிக்கவுமில்லை. இஸ்லாமிய சமூகம் எங்கேயுமே பெண்களின் உரிமைகளை பறிக்கவுமில்லை. இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கின்றது என்று பேசுபவர்களில் அதிகமானோர் இஸ்லாமிய அடிப்படை அறிவு இல்லாதவர்களும், நவீன நாகரீக கலாச்சார தாக்கத்தின் உச்சகட்டத்தை தொட்டவர்களும் தான்.
நவீன நாகரிகத்தின் உச்சகட்டம் இஸ்லாமிய பெண்களின் சாபக்கேடு என்பதை ஏன் இந்த சமூகம் இன்னும் விளங்காமல் இருக்கின்றது??????
பெண்கள் எப்போதும் பெண்களாகவே இருப்பதைத் தான் இஸ்லாமும் இந்த சமூகமும் எதிர்பார்க்கின்றது. நாகரீகம் என்ற பெயரில் இஸ்லாமிய பெண்கள் பாழாய் போவதை இஸ்லாமும் இச் சமூகமும் விரும்பவில்லை. ஒரு பெண் பெண்ணாக இருப்பது தான் பெண்மைக்கு அழகு என்பதே பெண்கள் அறிய வேண்டும்.
வீணான விதண்டாவாதங்கள் செய்வதை விட்டு விட்டு இஸ்லாமும் இச்சமூகமும்தந்த அழகிய பெண் உரிமைகளை அதன் தூய வழியில் இந்த முஸ்லிம் பெண் சமூகம் செய்ய முற்பட வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக