போர்வையூர் கோளாறு எங்கே???

சபள்ளி நிர்வாகம் என்பது கொடியேற்றமும், புர்தா ஓதுவதும்,கந்தூரி நடாத்துவதும், மரங்களில் இருக்கின்ற தேங்காயை பரிப்பதும், பாங்கு சொல்வதும், தெழுகை நடாத்துவதும், கஞ்சி கொடுப்பதும், கப்ர் தோண்டுவதும், மந்திரிப்பதும், குறிபார்ப்பதும் அல்ல. இது தான் நிர்வாகம் எண்டு நீங்கள் நினைத்திருந்தால் இனி வர நினைத்திருப்பவர்கள் அல்லாஹ்வுக்காக பின்வாங்கிக்கொள்ளுங்கள்.

பள்ளி ஒரு ஊரை ஒற்றுமைப்படுத்துகின்ற இடம். முழு ஊருக்கும் தலைமைத்துவம் கொடுக்கின்ற மத்தியஸ்தலம். அங்கு யாரும் தனித்து நிர்வகிக்க அது யாருடைய பரம்பரைச் சொத்தல்ல, பாட்டன் பூட்டன் பங்குமல்ல. அது முழு ஊரினதும் சொத்து, முழு ஊரினதும் உரிமை.

பள்ளி நிர்வாகம் என்பது அந்த மொத்த ஊரினதும் நிர்வாகம். அந்த ஊர் ஒவ்வொருவருக்கும் பொறுப்பான நிர்வாகம். நீங்கள் ஊரை நடாத்துங்கள், நாங்கள் பள்ளியை நடத்துகின்றோம் என்று அங்கு யாரும் ஒதுங்கிக்கொள்ள முடியாது.

கிடைக்கின்ற வருமானத்தை செலவு செய்துவிட்டு வருடா வருடம் வரவுசெலவுகளை காட்டிக்கொண்டிருப்பது தான் நிர்வாகம் என்றால் அது எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் பள்ளி நிர்வாகம் என்பது ஒரு பாரிய பொறுப்பு. அல்லாஹ்வினுடைய மாளிகையை நிர்வகிக்கின்ற பொறுப்பு.

2003 ஆம் ஆண்டு வெள்ள அனர்த்தத்திலிருந்து இன்னமும் எங்களுடய ஊர் அதே நிலையில் தான் இருக்கின்றது. ஏதோ கட்டிடங்கள் ஆங்காங்கே உயர்ந்து நிற்கின்றனவே தவிற வேறு எந்தப் பலனையும் கண்டதாய் இல்லை. ஒவ்வொருவரும் தானும் தன் வருமானமும் தன் குடும்பமும் என்று மிக சுயனலமாக மாறிவிட்டார்கள். எவருக்கும் ஊர் பற்றிய அக்கரையோ ஊரார் பற்றிய அக்கரையோ இருப்பதாக தெரியவில்லை.

பள்ளி நிர்வாகத்துக்கும் ஊர் முன்னேற்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாதவர்கள் தான் நீங்கள் என்றால், எங்களுடைய ஊர் இனிவரும் காலங்களிலும் அதே நிலையில் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

போதைப்பாவனை, விபச்சாரம், திருட்டு, அடாவடித்தனங்கள் அத்தனையும் கூடிப்போய் இருப்பதன் பாரிய பங்கை பள்ளி நிர்வாகமே பொருப்பேற்க வேண்டும்.

முதலாவதாக ஊரினுடைய எதிர்காலம், வளர்ச்சி என்பவற்றை சிந்தித்து அனைவருமாக சேர்ந்து எந்த பாகுபாடும் இல்லாமல் ஒற்றுமையாக ஒரு நிர்வாகத்தை தெரிவுசெய்யுங்கள். (ஆனால் அதுவும் எங்களுடய ஊரைப் பொருத்தமட்டில் சாத்தியமற்றது ஏனென்றால் எவனுக்கும் அடுத்தவன் பற்றிய நல்லெண்ணமே கிடையாது.)

இன்று இந்த நிர்வாகத்தை கலைத்துவிட்டு புதிய நிர்வாகத்தை தெரிவுசெய்ய வேண்டும் என்ற கருத்தில் ஒன்றுபட்டவர்கள் நாளை தெரிவு செய்யப்படுகின்ற நிர்வாகத்தை முழுமனதோடு ஏற்பார்கள் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. நாளை தெரிவு செய்துவிட்டு நாளை மறுநாள் ஏசித்திரிவார்கள் என்பது உறுதி.

நாங்கள் நிர்வாகத்தை பொருப்பற்றால் இப்போது ஊர்மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள அத்தனை குறைகளையும் நிவர்த்திப்போம் என்ற உறுதி உள்ளவர்கள் முன்வாருங்கள், அல்லது இவர்கள் வந்தார்கள் என்றால் நாங்களும் இவர்களோடு சேர்ந்து ஒத்துழைத்து ஊரின் தேவைகளை முன்னெடுப்போம் என்ற உறுதியோடு சிலரை முன்னிருத்துங்கள்.

எந்த ஒரு குடும்பத்துக்கோ, எந்தவொரு குழுவுக்கோ மொத்தமாக நிர்வாகத்தை கொடுத்துவிட வேண்டாம். ஒரு ஐக்கியமான குழுவை நீங்களாக சுயமாக தெரிவசெய்யுங்கள்.சொந்த விருப்பு வெருப்புக்களை தாண்டி தூர நோக்கோடு சிந்திய்யுங்கள். ஊரினுடைய அடுத்த பரம்பரைக்காக சிந்திய்யங்கள். வாளிபர்களை உள்வாங்குங்கள். ஆளுமைகளுக்கு சந்தர்ப்பம் கொடுங்கள், வருபவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

ஆலோசனைகளில் ஊராரையும் சேர்த்துக்கொள்ளுங்கள், கருத்துக்களுக்கு மதிப்பளியங்கள், வெளிப்படையாய் நடந்துகொள்ளுங்கள், முன்மாதிரியாய் நடந்து காட்டுங்கள், தெரியாததை கற்றுக்கொள்ளுங்கள்,தெரிந்தவர்கள் சொல்லிக்கொடுங்கள்.

நாங்கள் வெளி ஊர்களைப்பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம். ஒரு பள்ளி நீர்வாகம் என்ற வகையில் ஊரினுடைய கல்வி மட்டத்தை கூட்டுவதில் எந்த அளவு கடந்த காலங்களில் செயற்பட்டோம்.கடந்த 16 வருடங்களில் பாடசாலையின் பெறுபேருகளில் ஊர் தலைமைகள் என்ற ரீதியில் எந்த அளவு பங்குவகித்தோம். எத்தனைபேரை உருவாக்கினோம் என்று சிந்திய்யுங்கள். கல்வி வளர்ச்சிக்காக வருமானங்களில் பெரும் பகுதியை ஒதுக்குங்கள். ஆளுமைகளை உருவாக்குங்கள்.

எங்களுடைய ஊர் ஒரு அருள்.கைக்கு அடக்கமான சனத்தொகை, எல்லோர்க்குமாக ஒரு பள்ளி, தனியான பாடசாலை, மைதானம், ஒரு பெரிய வாளிபர் கூட்டம் என அனைத்தும் எங்களுடைய வளங்கள். நாங்கள் அவற்றை பயன்படுத்த தவறிவிட்டோம். வீணடித்துவிட்டோம்.

ஒவ்வொருவரும் அவரவரது பொறுப்புகள்  பற்றி விசாரிக்கப்படுவீர்...

கருத்துகள்