காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 12

என்ன நினைத்தானோ தெரியவில்லை. கில்கமேஷ் வேகமாக காட்டுக்குள் நுழைந்தான். சட்டைப்பைக்குள் செல்போனை போட்டுவிட்டு எந்த இடத்தில் இருந்து திட்டம் போட்டார்களோ அங்கேயே சென்றான். ஆனால் அங்கு அவர்கள் யாரும் இல்லை என்றதும் அவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த போது அந்த குகை தெரிந்தது.  உள்ளே சென்ற போது முன்னரை போலவே மூவரும் கட்டிக்கிடந்தனர். அதோடு மயக்கத்தில் காணப்பட்டனர். என்ன நடந்து இருக்கும் என்று யூகிக்க முடியாத நிலையில் மூவரின் கட்டுக்களையும் அவிழ்த்து விட்டு ஆற்றோரம் சென்று தண்ணீர் எடுத்துவந்து தெளித்தான். மயக்கத்தில் இருந்து முதலில் விழித்த ஆர்தர் எங்கே மறுபடியும் கடத்திய ஆட்கள் தான் வந்திருப்பதாக எண்ணி கத்தினான்.

"எனக்கு எதுவும் தெரியாது.. எங்களை விட்டுடுங்க..."

"என்னாச்சு... யார் உங்களை கட்டிப்போட்டது?" என கில்கமேஷ் கேட்டபோது மீராவும்,ஜெனியும் முழித்து கொண்டனர்.

"யாருன்னு தெரியல்ல யாரோ... எங்களை தாக்கி..."என்று மீரா ஏதோ சொல்லவருமுன் ஜெனி.

"அது யாருன்னு எனக்கு தெரியும்..."என்றுவிட்டு அமைதியா இருந்தாள்.

"என்ன... உனக்கு தெரியுமா? என்னடி சொல்றே?"

"உனக்கு நியாபகம் இல்லையா... நமக்கு சுமேரியன் லெங்குவேஜ் படிப்பிக்குறதுக்கு ஒரு விசிட்டிங் லெக்ச்சர் வந்தாரே... அவர்தான்..." என்றாள்.

அதை கேட்டதும் ஆர்தர் அதிர்ச்சியில் "எனக்கும் நியாபகம் வருது.. ஆமா ..அவரே தான்.. அவரு... அவரு ஏன் நம்மள கட்டிப்போடனும்."என்று கேட்டான்.

"அது எனக்கு தெரியல்ல ஆனா நிச்சயமா ப்ரொபெஸர் லாரன்ஸும் இவரும் கூட்டாளிங்களா இருக்கணும்." என்றாள் எதையோ யோசித்து கொண்டே..

"நீ என்ன பேசுரே என்னு எனக்கு புரியல்ல.. கொஞ்சம் தெளிவா சொல்லு" என்றான் கில்கமேஷ்.

"இவன் கைல நான் அந்த மோதிரத்தை பார்த்தேன்... அப்படின்னா... அப்படின்னா என்ன அர்த்தம் ரெண்டுபேரும் சேர்ந்து தான் இந்த மாதிரி திருட்டுத்தனமாக மியூசியத்தில் இருக்குற பொருட்களை எடுக்குறாங்க போல..." என்றாள்.

அதை கேட்டதும் சற்று யோசித்த கில்கமேஷ்...

"இல்லை.. அப்படி இல்லை... நான் அந்த லோரன்ஸை பார்த்தேன்... போனை எடுக்குறதுக்காக அவன் மியூசியத்துக்கு வந்திருந்தான்." என்றதும் மூவரின் மூளையும் ஒரே கேள்வியை தான் எழுப்பியது.

"போன் கிடைச்சிதா???"என்று ஆர்வத்துடன் கில்கமேஷை பார்த்து கேட்டனர்.

"ஒஹ்ஹ். ஒஹ்ஹ்.. மெதுவா மெதுவா... இந்தாங்க உங்க போன்."என்று எடுத்து கொடுத்து அங்க  நடந்த விடயங்களை சொன்னான்.

எப்படியோ எவவிடன்ஸ் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தாலும் நடந்த விடயங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி விட்டன. போனை ஒரு பக்கமாக வைத்து விட்டு எல்லோருமே தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தனர்.

"அந்த லாரன்ஸ்ஸுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நம்மளை போலீஸ்ல மாட்டிவிட்டுட்டு அவனுக்கு எதிரா இருக்குற எவிடென்சயும் அழிக்க வருவான்..." என மீரா ஆத்திரத்தோடு சொன்னாள்.

"இந்த ஈகிழ் டேட்டோ போட்ட ஆளுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்கும்... ஜெனி சொல்வது போல ரெண்டுபேரும் கூட்டாளிங்களா இருக்குமா?" என ஆர்தரும் கேள்வி எழுப்பினான்.

"இரு இரு. ஏதோ ஈகிழ் டேட்டோ என்னு சொன்னயே அப்படி என்னா என்ன?"என்று கில்கமேஷ் ஆங்கிலத்தில் புரியாத அந்த சொல்லை கேட்டான்.

"ஈகிழ் என்னா கழுகு. டேட்டோ என்னா பச்சை குத்துவாங்களே அதான்..." என்று விளக்கினாள் ஜெனி.

"என்ன அப்படின்னா. அவங்க தானா. அது... அந்த ப்ரொபெஸர் சொன்னான். கழுகு உருவத்தை பச்சை குத்தினவன் தான் வந்து மோதிரத்தை பறிச்சிட்டு போனதா.... அப்படி என்னா இதெல்லாதுக்கும் காரணம் அவனுங்க தான்.. நான் அவங்கள சும்மா விடமாட்டேன்."என்று கோபமாக சொன்னான்.

எதுவும் புரியாமல் மூவரும் அவனையே பார்த்தனர்... அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதே மூவரின் கேள்வியாகவும் இருந்தது.

"அவங்க என்கிடுவோட பிறந்தவர்கள்... எனக்கு எதிராக போராட கடவுள்கள் இட்ட கட்டளைக்கு இணங்க அவனை பயிற்றுவித்தவங்க.... என்கிடு எனக்கு உயிர் நண்பனாக மாறியது அவனுங்களுக்கு பிடிக்கல... என்கிடு அவனுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையை சரியா செய்யல என்னு அவனுங்க ஆத்திரப்பட்டாங்க... இப்போ எதுக்கு வந்து இருக்காங்க என்னுதான் புரியல்ல.." என்றான் யோசித்து கொண்டே... இதை கேட்டதும் ஜெனிக்கு பேயடிக்காத குறை... அப்படியே அதிர்ச்சியில் மூழ்கியவள் அவளையும் அறியாமல் அந்த கேள்வியை கேட்டுவிட்டாள்.

"என்ன... அப்போ 8000 வருசமாகியும் அவங்க யாரும் சாகலியா....?"என்று கேட்டாள்.

"என்ன சொன்னே 8000 வருசமா? என்ன ஒளர்ரே...?"என்று அவன் கேட்டதும் நாக்கை கடிந்து கொண்டாள் ஜெனி.

"சொதப்பிட்டியே மீரா... திடீரென உண்மையை போட்டு உடச்சிட்டியே.."என்றாள் மீரா.

கில்கமேஷ் கடும் குழப்பத்தில் இருந்தான். "இப்போ சொல்லப்போறீங்களா இல்லியா?" என்ற அதிகார குரலில் மூவரும் பயந்தே போய்விட்டனர்.

கில்கமேஷ்ஷுக்கு எப்படி இதனை எடுத்து சொல்வது என தெரியாமல் ஜெனி தயக்கத்தில் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்