காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 09

மீரா அருகில் வந்தபோது தான் தெரிந்தது... அவள் ஒன்றும் பயத்தில் கத்திக்கொண்டு வரவில்லை. மோப்பம் பிடிப்பதற்காக போலீசார் கொண்டுவந்த இவர்களின் பைகளை விட்டுச்சென்றுள்ளார்கள். அதனை காட்டில் கண்டதும் கொண்ட ஆனந்தத்தில் தான் கத்திக்கொண்டு வந்தாள் என்பது.

"உஃப்.... இங்க பார்த்தியா நான் என்ன கொண்டு வந்து இருக்கேன்னு.. நம்ம பேக்ஸ்... காட்டுக்குள்ள கிடந்தது..."என்று மகிழ்ச்சியோடு சொன்னாள் மீரா.

"இதுக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?..."என்றான் ஆர்தர்.

பையை திறந்து தன்னுடைய போனை எடுத்து மீரா

"உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்.."என்று கொஞ்சினாள்.

அதைப்பார்த்து ஆர்தர் ஒருவேளை மீரா போனில் யாருடைய போட்டோவை பார்த்து இப்படி சொல்கிறாளோ என்றெண்ணி அவனும் அதை பார்க்க முயற்சித்தான். மீராவோ விடவில்லை வேண்டுமென்றே அவனுக்கு காட்டாமல் அங்கும் இங்கும் காட்டி அலைக்களித்தாள். அப்போது தான்  ஜெனிக்கு பொறி தட்டியது.

"ஐடியா!"என்றவள் மீராவின் போனை பிடுங்கி இன்டர்நெட்டில் ப்ரொவுஸ் பண்ண ஆரம்பித்தாள். அப்படியே ஆர்த்தரின் போன் மாடல் நம்பரை அடித்து அதன் போட்டோவை எடுத்தாள்.

"கூல்....இது சூப்பர் ஐடியா!" என்றான் ஆர்தர். அதனை கில்கமேஷ் கிட்ட காட்டி அவன் எடுத்து வரவேண்டிய போனை பற்றி விளக்கினாள்.

"எப்படியும் அது ஸ்விச் ஆஃப் ஆகி இருக்கணும்... கீழேதான் எங்கயாச்சும் விழுந்து இருக்கும்.  எப்படியாவது அதை கொண்டுவந்துட்டா போதும் அதுவே பெரிய ஹெல்ப்பா இருக்கும்." என்றாள் ஜெனி.

"சரி ஆனா நான் அதை கொண்டுவந்து கொடுத்ததும் என்னோட நாட்டுக்கு எனக்கு வழிகாட்டுவதோடு என்கிடுவின் மோதிரத்தை எடுத்தவனையும் என்கிட்ட காட்டனும். அவனுக்கு என்கையால தான் சாவு" என்றதும் மீராவும் ஜெனியும் லேசாக பயப்பட

ஆர்தர், "அப்படின்னா நீ அந்த ஆக்கியொலிஸ்ட் அதான் புதைபடிமத்தில் இருந்து மோதிரத்தை கண்டுபிடிச்சானே அவனை தான் கொல்லனும்." என்றான் அது மீராவுக்கு புரிந்து முழங்கையால் அவனுக்கு ஒரு குத்து விட்டாள்.

"ஆவ்ச்..."

"சரி அப்படியே செய்றோம். இப்போ புறப்படலாம்." என்றவள் போறவழியில் ஏனைய விடயங்களை விளக்கி கொண்டே சென்றாள்.

அப்போது மரத்தின் வேர் ஒன்றில் அவள் இடறி விழப்போக சட்டென கில்கமேஷ் அவளை விழாமல் பிடித்து கொண்டான். பின்னாடி வந்து கொண்டிருந்த மீரா "வாவ்... நான் இப்படி விழுந்து இருக்க கூடாதா??" என சொல்ல மறுபடியும் ஆர்தர் கடுப்பாகினான்.

சற்று நேரம் திகைத்து அவனையே பார்த்து கொண்டிருந்த ஜெனிக்கு கில்கமேஷ் பற்றிய ஒருவிடயம் சட்டென நியாபகம் வர அவளாகவே நன்றி சொல்லிவிட்டு விலகி கொண்டாள். (உடனே எல்லோரும் கொஞ்சம் ரொமான்டிக்கா யோசிக்க ஆரம்பிச்சிடுவீங்களே... அவனுக்கு அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது.🤪)

ஜெனிபர் யோசிச்சது இதைத்தான். "கில்கமேஷ் யாரையும் காதலிக்கவும் இல்ல கல்யாணம் பண்ணிக்கவும் இல்ல. ஆனா அவனோட அதிகாரத்தை பயன்படுத்தி உருக் நகரத்தில் இருந்த ஒரு கன்னிப்பெண்ணையும் விட்டுவைக்கல்ல. அவர்களில் யாருக்காவது கல்யாணம் என்னா அந்த ராத்திரியில் போய் அந்த பெண்ணை அவனுக்கு சொந்தமாக்கிடுவான்... அவனுக்காக ஒரு விலைமாது கூடமே கட்டி இருந்தான்... அவனை இந்த அளவுக்காவது மனிசனா மாத்தினது என்கிடு தான்... ஆனா என்ன அவர்தான் இப்போ இல்லியே... அவனாச்சும் உயிரோட வந்து இருந்தா சூப்பரா இருந்து இருக்கும்." என்றெண்ணி கொண்டே மீண்டும் பயணித்தாள்.

"என்கிடு எப்படி இருப்பாரோ...????" என்று ஏங்கி கொண்டே காட்டில் இருந்து நகரத்தில் இரவு நேரத்தில் வந்து சேந்தனர்.

"நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்லே... எங்களால சிட்டிக்குள்ள சாவகாசமா உலவ முடியாது நாங்க நிரபராதி என்பதற்கான ஆதாரம் இல்லாம எதுவும் பண்ண முடியாது. நாங்க இந்த காட்டுக்குள்ள தான் இருப்போம் எப்படியும் இன்னிக்குள்ள அந்த போனை கொண்டுவந்திடுங்க."என்றாள்.

"ம், ஜாக்கிரதையா இருங்க." என்றவன் மியூசியத்தின் அட்ரஸை மீரா சொல்ல அதை மனதில் நிறுத்தி கொண்டு நகரத்தில் நுழைந்தான்.

இந்த தடவை யாரும் அவனை பார்த்து பயந்து ஓடவில்லை. தன்னை எப்படி மாத்திவிட்டாங்க என்றுகூட அவனுக்கு தெரியாது. அந்த வழியில் சென்ற காலேஜ் பெண்கள் எல்லாம் இவனை ஜொள்ளுவிட்டு கொண்டே சென்றனர். எப்படியோ எதிர்க்க ஒரு வயதானவர் வந்தார் .அவரிடம் அந்த அட்ரெசை சொல்லி வழி கேட்டான். அவரும் வழி சொல்லிவிட்டு நகர்ந்தார்.

***************

"இதெல்லாம் சரிவருமா. ஜெனி..?"

"எல்லாம் சரியா வரணும் என்னு கடவுளை வேண்டிக்குவோம்."

"சரி இனி நாம என்ன பண்ணுறது... இருட்டுறதுள்ள அந்த குகைக்கு போறது நல்லது என்னு தோணுது.." என்றாள் மீரா.

அவர்களும் காட்டுக்குள் நகர்ந்தனர். ஜெனிபர் எண்ணமெல்லாம் கில்கமேஷ் எப்படியாவது போனை எடுத்து வந்திடனும் என்றே இருந்தது. அப்படியே போய்க்கொண்டு இருக்கும் போது முன்னாடி அவர்கள் வந்து நின்றார்கள்.

"ஆஹ்...ஆஹ்..."

*********

கில்கமேஷ் அந்த மியூசியத்துக்கு முன்னாடி போய் நின்றான். ஆர்தர் சொன்ன பெயற்பலகை இருந்த ரிசப்ஷனிஸ்ட் கிட்ட போய் , "மியூசியத்தை சுத்திப்பாக்கணும் டிக்கெட் கொடுங்க"என்றான்

"பெயரை சொல்லுங்க சேர்!"

"கில்க....,இல்ல கே கே." பெயரில் தடுமாறியதும் அவனை ஒரு பார்வை விட்டபடியே, "எந்த ஊர்?"

"உருக்."

"என்ன?  அப்படி ஒரு ஊர் இருக்கா.." என்றவளுக்கு அந்த பெயரை இதற்கு முன்பு எங்கோ கேட்டது போல் இருந்தது. அவற்றை நோட் பண்ணிக்கொண்டு டிக்கட்டை நீட்டினாள்.

அப்படியே உள்ளே போனவனிடம், "சார் சார்... டிக்கெட்டை வாங்கிட்டு போறீங்க. பணம் யாரு தருவா?"

"ஓஹ்.. எவ்வளவு தரணும்?"

"100 ரூபா கொடுங்க" என்றதும் ஜெனி கொடுத்த 500 ரூபாயையும் அப்படியே தூக்கி கொடுத்து விட்டு உள்ளே சென்றான் கில்கமேஷ். அந்த பெண்ணோ ஆச்சர்யமாக அவனை பார்த்து கொண்டிருந்தாள்.

"யாரிவன்...??"

   

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்