21.04.2019 அன்று நடைபெற்ற மிருகத்தனமான, மிலேச்சத்தனமான மனிதாபிமானத்திற்கு முறனான இந்த தாக்குதலை எமது முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டித்தது. இந்த கீழ்த்தரமான தாக்குதலுக்கும் முஸ்லிம்களுக்கும் எவ்வித சம்பந்தமும் தொடர்பும் கிடையாது. மேற்குலக சக்திகளுடன் இயங்கும் ஓர் இயக்கம் இத்தகைய தாக்குதலை எமது நாட்டில் இயங்கும் சில அடிப்படைவாத அமைப்புகள் ஊடாக முன்னெடுத்தது.
இத் தீவிரவாத அமைப்பு முஸ்லிம் பெயர் தாங்கிகளால் நிறுவப்பட்டமையால் இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினையும் தீவிரவாதிகளாக காட்டுவதற்கு ஒரு சில இனவாத ஊடகங்கள் மற்றும் அரசியல் வாதிகள் முயல்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஊடகங்களின் பொறுப்பு தார்மீப் பொறுப்பாகும். ஒவ்வொரு இனமும் அவர்களுக்கு என ஓர் ஊடகத்தை உருவாக்கிக் கொண்டு அவர்களின் சமூகம் நசுக்கப்படும் போது சிறந்த முறையில் காய் நகர்தல்களை செய்து வருகின்றனர். ஆனால் நாம் முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரம் ஓர் ஊடாகமோ Tv Channel ஓ இல்லாதது கவலைக்குரிய விடயமே.
ஒவ்வொரு சமூகமும் அவர்களுக்குரிய ஊடகங்கள் மூலமோ அல்லது TV அலைவரிசையின் மூலமோ தத்தமது சமூகத்திற்கு நடக்கும் அநீதிகள், உரிமை மீறல்கள் மற்றும் போலிப் பிரச்சாரங்களுக்கு தகுந்த பதிலடிகளை கொடுத்து வருகின்றனர். பல்வேறு இனவாத தாக்குதல்கள் ஓரிரு இடத்தில் இடம்பெற்றவை பல்வேறு இடங்களில் பரவுவதற்கு சில இனவாத ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களே காரணமாயிற்று. ஆனால் இதன் உண்மை நிலையை தெளிவுபடுத்த நமது சமூகத்திற்கு இது போன்ற ஊடகங்கள் இல்லாமையால் நாம் இன்னும் இன்னும் நசுக்கப்படுகின்றோம். இப்போது தான் எமக்கு ஓர் ஊடகம் வேண்டும் என்ற தாகம் ஏற்பட்டுள்ளது.
பல ஊடகங்கள் எமது முஸ்லிம் வர்த்தகர்ளின் நிதியினால் அதாவது (Advertisement) ஓடிக்கொண்டிருக்கிண்றன. நமது சமூகத்தில் எத்தனை எத்தனை செல்வந்தர்கள், ஊடகவியலாளர், அரசியல்வாதிகள் மற்றும் படித்தவர்கள் இருந்தும் ஏன் எமது ஊடகக் கனவை நிறைவேற்ற முடியாது உள்ளது. மேலும் சிலரின் முயற்சியினால் சில TV Channel கள் உருவாக்கப்பட்டு அவை Facebook, YouTube போன்ற சமூகவலைத்தளங்களின் ஊடாக இயங்கிவருகின்றன. அவற்றிற்கு எமது முஸ்லிம் தனவந்தர்கள் அனுசரனை வழங்கி அற்றை மி அவசர அவசரமாக தேசிய இணைப்புடன் சேர்க்க முன்வர வேண்டும்.
எமது விளம்பரங்களை இந்த ஊடகங்களுக்கு வழங்கி இனவாத ஊடகங்களை ஓரம்கட்ட வேண்டும். இறுதியாக இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் தனி நாடு கேட்கவில்லை. தேசிய பாதுகாப்புகும், ஐக்கியத்திற்கும் மற்றும் அபிவிருத்திக்கும் பலம் சேர்த்து ஒரே நாட்டுக்குள் சுதந்திரமாக பெரும்பான்மை சமூகத்துடனும் ஏனைய சமூகத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டுகின்றோம். ஆகவே நமக்கு ஓர் ஊடகத்தை நாம் மிகச் சீக்கிரமே உருவாக்கி முஸ்லிம் சமூகத்தினதும் இஸ்லாம் மார்கத்தினதும் நட் பெயரை பாதுகாப்பதுடன் ஏனைய சமூகங்களுக்கும் எமது உண்மை நிலைப்பாடுகளை தெரியப்படுத்த இலகுவாகவும் அமையலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக