"ஆமாம்மா... கொஞ்ச நாள் என்னா... எப்படியும் ரெண்டுவாரம்... கூடினால் ஒரு மூணு வாரம் ஆகும்..."என்கிறார் லூதர்.
"என்னப்பா இப்படி சொல்றீங்க நீங்க என்னை விட்டு பிரிஞ்சி இவ்வளவு நாள் இருந்ததே இல்லியே. கண்டிப்பா போகனுமா?" அப்போது இதை கேட்டுக்கொண்டு மாடியில் இருந்து வந்த ஜெனி.
"அப்படியெல்லாம் போகும் போது பேசக்கூடாது டிடானியா... அவர் வேலை விஷயமா தானே போறாரு... முடிஞ்ச உடனே வந்திடுவார்... அதுதான் நாங்க இவ்வளவு பேர் இருக்கோமே..." என்று அங்கிள் அருகில் வந்து நின்றாள்.
"விக்டர் கிட்ட உன்னை பார்த்துக்க சொல்லி இருக்கேன். ஏன் நான் ஜெனிக்கிட்டயும் அவங்க பிரெண்ட்ஸ்கிட்டயும் கூட நான் சிங்கப்பூர் போற விஷயத்தை சொல்லிட்டேன். அதனால டோன்ட் வொரி ஐ வில் கம் பேக் சூன் ."என்றார்.
இருந்தாலும் முகத்தை கொஞ்சம் உர்ரென்று வைத்து கொண்டு... "சரி" என்றாள்.
"சரிம்மா. இப்போ நான் டிக்கெட் புக் பண்ண போகபோறேன்... சீ யூ.." என்று விட்டு கிளம்பினார்.
*****************
"சார், கூப்பிடீங்களா?"
"ஆமா, நேத்து என்னை சூட் பண்ண முயற்சி பண்ணாங்கல்ல. அது விஷயமா அங்க இருந்த சி சி டீவிய ச்செக் பண்ண சொன்னேன். கரெக்ட்டா அந்த நேரத்துக்கு மட்டுமான வீடியோ எல்லாம் திருடு போய் இருக்குறதா சொல்றாங்க."என்றான் மித்ரத். அதை கேட்டதும் உள்ளார விக்டரை புகழ்ந்தான்.
"சூப்பர் டா மச்சான்...." அதன் பின்
"என்ன சேர் அதையும் திருடிட்டாங்களா?"
"ஆமா."
"இது என்ன சார் பெரிய கொடுமையா இருக்கு. உங்களை எதுக்கு கொல்லனும். அவங்களுக்கு அப்படி என்னதான் வேணும்." என்று பச்சை பிள்ளையாட்டம் மூஞ்சியை வைத்து கொண்டு கேட்டான்.
"ஏதோ விட்ட குறை தொட்ட குறை தொடருது போல தெரியுது அவங்க யாரென்னு கண்டுபிடிச்சி."
"கொன்னுடலாம் என்று நினைகிறீங்களா சேர்."
"என்னது."
"இல்ல... அவங்கள கண்டுபிடிச்சு. உங்களை கொல்ல பார்த்தவங்க தானே போட்டு தள்ளிட்டா சரி சேர்." என்றான் வேண்டுமென்றே அவன் நினைத்தது போல மித்ரத் இவனை இன்னும் நம்பிக்கைக்கு உரியவனாக நினைக்க அந்த பேச்சு உதவியது. மித்ரத் அவன் தோளில் தட்டிக்கொடுத்து
"உன்னை எனக்கு இன்னும் பிடிச்சு போய்ட்டு." என்றான்.
"அதுதானே எனக்கும். வேணும்.." என்று சொல்லிக்கொண்டான் சிரித்து கொண்டே!
"உருக் சிட்டியோட ப்ளூ பிரிண்டை பார்த்தேன். இது தான் பெரிய மாளிகை போல தெரியுது. ஏனைய இடங்கள் எல்லாம் காலப்போக்கில் அழிவடைந்து. அங்கே புதுப்புது பில்டிங்ஸ் உருவாகி இருக்கு. ஆனால் இது மட்டும் மணலால் மூடப்பட்டு இருந்ததாலும் அந்த மேலே வேறு கட்டிடங்கள் கட்ட முடியாததாலும் பாதுகாப்பா இருக்கு நம்ம வேலைய ஆரம்பிச்சு இன்னியோட ரெண்டுவாரம் ஆகுது. கிட்டத்தட்ட இந்த வேலையில 35 வீதம் முடிஞ்சிருக்கு." என்று சீனியர் ஆர்க்கியொலிஸ்ட் ஏனையோர்களிடம் சொல்லி கொண்டிருக்கும் போது வேலைத்தளத்தில் பணி புரிந்து கொண்டிருந்த ஒருவன் அங்கு வேகமாக ஓடிவந்தான்.
"மேடம் மேடம்!!!!"
"என்ன? என்னாச்சு...!!ஏன் இப்படி ஓடிவர்றீங்க?"
"மேடம் அந்த பக்கம் ஒரு கதவு இருக்கு அநேகமாக அது மாளிகையோட முதல் கதவா இருக்கணும். இப்போதான் எங்க ஆளுங்க தோண்டி எடுத்தாங்க.." என்று சொன்னதும் அங்கிருந்த ஜெனியும் மீராவும் அலர்ட் ஆகினர்.
அதே போல வேறு திசையில் வேலை செய்து கொண்டிருந்த கில்கமேஷ் காதிலும் இந்த செய்தி எட்டி விட்டது. அவன் வேலைய நிறுத்தி விட்டு அவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்டான்.
"என்ன சொல்றீங்க... மாளிகையோட கதவா... இது ரொம்ப நல்ல செய்தியாச்சே... வாங்க எல்லோரும் அந்த இடத்துக்கு போகலாம்..." என்று சொல்ல அங்கு இருந்த எல்லோரும் மற்றும் ஏனையவர்களும், கதவு வெளிப்பட்ட இடத்துக்கு சென்றனர்.
"கதவு மட்டுமே வானளாவ இருக்கும் போல..." என்று யாரோ பேசியது கேட்டு ஒளிந்திருந்த கர்வமொன்று தானாக துளிர்விட்டது கில்கமேஷ்ஷிற்கு.
ஆம், அது அவன் பார்த்து பார்த்து கட்டிய பாரிய கொத்தளங்களை கொண்ட மாளிகை அதனால் தான் அதை பற்றி மக்கள் பேசும் போது உள்ளார, சந்தோசப்பட்டான். அங்குவந்து பார்த்த சீனியர் ஆர்க்கியொலிஸ்ட்,
"வாவ்... கட்டியவன் பெரிய கலைஞன் தான். ஆனா இப்போ இந்த கதவை எக்காரணம் கொண்டும் திறந்து விடாதீங்க."
"ஏன் திறக்க வேணாம் என்று சொல்றீங்க சீஃப்...?" என ஜெனி கேட்டாள்.
"சுத்தி பார்த்தீங்களா... எவ்வளவு மணல் என்று. நதியை நோக்கி முகப்பை அமைச்சு இருக்காங்க. அன்னிக்கி காலகட்டத்தில் அது ஒரு வழமை ஜஸ்ட் ஒரு கதவு இருக்கு என்பதற்காக அதை இப்போ திறந்தா எல்லா மண்ணும் மறுபடியும் மாளிகையை மூடிடும்."
"ஒஹ்ஹ்."
"அதனால கதவை சுற்றி இருக்குற பகுதியில் எல்லா மண்ணையும் அகற்றிய பின்னர்தான். உள்ளே போக முடியும். எப்படியும் ஒரு ரெண்டு வாரம் ஆகும்." என்றார்.
"இல்ல... இப்போவே உள்ளே போக முடியும். அதுக்கு ஒரு வழி இருக்கு" என்றான்... இதை கேட்டு கொண்டு அங்கு வந்த மித்ரத்.
"ஐயையோ மித்ரத் ஆஹ்...!!!" என்று மீரா பதற்றப்பட அவன் குரல் கேட்டு ஜெனியும் மீராவும் ஆட்களுக்குள் ஒளிந்து கொண்டனர். ஜெனியும் மீராவும் ஒளிந்து கொள்வதை கண்டு கில்கமேஷ் குழம்ப நிலைமையை புரிந்து கொண்ட ஆர்தர் அவனை மறைவாக இழுத்து கொண்டான். ஆர்க்கியொலிஸ்ட் நின்ற இடத்துக்கு மித்ரத் அவனுடைய பீ ஏ ராபர்ட் கூட அங்குவந்தான்.
கருத்துகள்
கருத்துரையிடுக