காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 64

"மித்ரத்துக்கு இந்த உலகத்தையே அவன் ஒருவன் மட்டும் ஆளவேண்டும் என்ற பேராசை. அதுக்கு அவனுக்கு கிடைச்ச புதையல் தான் ஊர்நஷிப் எழுதி வெச்ச அந்த குறிப்பு நாம வேன்ல வந்தப்போ நான் இன்டர்நெட்ல அவனை பத்தி ஏதாவது கிடைக்குமா என்று தேடி பார்த்தேன்." என்றான் விக்டர்.

"கிடைச்சதா?"என ஆர்தர் கேட்டான்.

ஹ்...ம்.  அவன் இந்த நாட்டோட பண்டைய மொழிகளை எல்லாம் கரைத்து குடித்திருக்கான். இதே ஊர்ல இருக்குற பல்கலைக்கழகம் ஒன்றில வரலாற்றியல் துறையில் பீ. எச். டி  முடிச்சிருக்கான். ஊர்நஷிப் எழுதி வெச்ச குறிப்புகளில் இருந்து என்கிடு  உயிர் ரகசியம் பற்றியும், அந்த மோதிரத்தை பற்றியும் தெரிஞ்சிக்கிட்டு இருக்கான். பலநாட்கள் தேடி கடைசில என்கிடுவோட மோதிரம் இத்தாலில இருக்கிறது தெரிஞ்சி அங்க  ப்ரொபெசர் என்கிற பெயரில் ஊடுருவி அங்கேயும் தேடி இருக்கான். அப்பறம் அது உங்க ப்ரொபெசர் லாரன்ஸ் கிட்ட இது இருக்கிறது தெரிஞ்சி அவர் கிட்ட இருந்து அதை எடுத்து இருக்கான். என்கிடு உடல் இங்க இருக்கிறது தெரிஞ்சி அதையும் அவனோட பணபலத்தை வெச்சி எடுக்க முயற்சி பண்ணி இருக்கான்.  கடைசில நம்மள வெச்சே அவன் நினைச்சத்தை  அடைஞ்சும் இருக்கான். அதுக்காக தான் அவன் டிடானியா அம்மாவையும் கொன்னான்.

என்று சொன்னான்.

"இதெல்லாம் தான் நம்ம எல்லோருக்கும் தெரியுமே!"என்று மீரா சொல்ல,

"அவசரப்படாதே! என்கிடுவுக்கு உயிர் கொடுத்து அவன் என்ன திட்டம் போட்டிருக்கான்னு ராபர்ட் அம்மா அப்பா கிட்ட கேளுங்க புரியும்"என்று சொல்லிவிட்டு ஹேமா பக்கம் திரும்ப,

அவனுக்கு ராபர்ட் அவனை உளவு பார்த்தது எப்படியோ தெரிஞ்சி போய் அவனை பற்றி அலசி ஆராய்ந்து பார்த்து இருக்கான். அப்போதான் அதிஷ்டவசமா அவன் ஆராய்ச்சிக்கு தேவையானா சயின்டிஸ்ட் நாங்க இருக்கோம் என்று கண்டுபிடிச்சு சாமர்த்தியமாக எங்களை இங்க வரவெச்சான். அவன் எங்க கிட்ட சொன்னது இதுதான். உயிரோட இருக்குற என்கிடு உடலில் இருந்து அவன் சக்திகளுக்கு காரணமான செல்லை பிரிச்சி எடுத்து அதை மித்ரத் உடம்பில் செலுத்துவது தான்... ஆனா?

"என்ன ஆனா?"

"அவனோட சக்திகளுக்கு காரணமான செல் என்னு நான் சொன்னது அவன் இதயத்தை..."

"என்ன????" கில்கமேஷ் அதிர்ச்சியோடு எழும்பினான்.

"ஏதோ ஒரு சாபத்தினால் தான் அவன் செத்தான். அவனை யாரும் சாகடிக்க முடியாது. ஏன் கில்கமேஷ் உன்னால கூட அவனை கொல்ல முடியாது, ஏன்னா அவன் தான் உன்னை கொல்ல உருவாக்க பட்டவன் ஆச்சே?"

"என்ன சொல்றீங்க?"என்று கேட்டான் கில்கமேஷ்.

"இப்போ இருக்குற என்கிடு கடவுள்கள் உன்னை அழிக்க உருவாக்கின அதே என்கிடு தான்."

"ஓஹ்... அப்போது… அதனால தான் என்கிடு கில்கமேஷை தாக்கினானா?" என்று மீரா சொன்னாள்.

"அப்படின்னா அவனுக்கு எதுவுமே நியாபகம் இல்லியா?" என்று டிடானியா கேட்டாள்.

"இல்ல" என சோகமாக பதில் கூறினார் ஹேமா.

"என்ன!!!! இதுக்காக தான் நான் இவ்வளவு வருஷங்கள் தவம் இருந்தேனா?  இதுக்காக தான் நான் உயிரோட இருந்தேனா?? என்னோட நம்பிக்கை, லட்சியம் எல்லாமே இப்படி ஒரே நாளில் அழிஞ்சி போய்டுச்சே," என்று கில்கமேஷ்  கூற அவனை ஜெனி சமாதானம் செய்ய பார்த்தாள்.

"இப்போ என்ன பண்ணுறது?" என்று கேட்டாள் டிடானியா.

"ஒருவேளை அவன் மறுபடியும் உங்களை தேடி வருவானா மாம்" என்று ராபர்ட் பயத்துடன் கேட்டான். அதற்கு ராபர்டின் அப்பா,

"ஒருவேளை எங்களை தேடி வரலாம். இல்லன்னா அவன் எங்களை போன்ற சயின்டிஸ்ட்களை தேடி போகலாம்" என்றார்.

"இன்னொரு முக்கியமான விஷயம், எங்க துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உலகில் இருக்குறாங்க. அதுல டிடானியா அம்மாவும் ஒருத்தங்க. பாவி அவன் அவங்களையும் கொன்னுட்டான்." என்றார் ஹேமா.

"நாம நினைக்குறத்தை விட மித்ரத் ரொம்ப புத்திசாலியா இருக்கான். பத்தாததற்கு இப்போ தி கிரேட் என்கிடு வேற அவன் பக்கத்தில் இருக்கிறான். நம்மலாள இனி ஒன்னும் பண்ண முடியாது."என்று ஆர்தர் நம்பிக்கை இழந்து சொல்ல மீரா அவன் காலை மிதித்து கில்கமேஷ் வருத்தப்படுவதை உணர்த்தினாள்.

"பிரச்சினை என்னு ஒண்ணு இருந்தா கண்டிப்பாக அதற்கு தீர்வு இருக்கும். அநியாயம் அக்கிரமம் நீடிக்க கடவுள் எண்ணிக்குமே விரும்ப மாட்டாரு. அதனால நாம யாராவது சரி என்கிடுவை சந்திச்சி நடந்த எல்லா விடயங்களையும் அவருக்கு நியாபக படுத்திட்டா போதும் மத்தது எல்லாம் தன்னாலே நடக்கும்."என்று ஜெனி சொல்ல கில்கமேஷ்,

"நான் போறேன். நான் அவன்கிட்ட எல்லாவற்றையும் எடுத்து சொல்லுறேன்.. கண்டிப்பா அவன் என்னை புரிஞ்சிப்பான்."என்றான்.

"உனக்கு கொஞ்சம் கூட மூளையே இல்லை கேகே.." என்ற ஆர்த்தரை கில்கமேஷ் முறைக்க,

"ப... அ....அது வந்து... அப்படி பார்க்காதே பா.. பயம்மா இருக்கு... அது நான் ஏன் அப்படி சொன்னென்னா..." என ஆர்தர் சொல்ல போக அவனை தடுத்த ஜெனி,

"அவன் சொல்றது சரிதான். உன்னை கண்ட இடத்தில் கொல்ல துடிக்குற என்கிடு கிட்ட நீயே போய் நிற்க போறேன் என்னு சொல்றே. கொஞ்சமாவது எங்களை பற்றி யோசிச்சியா?" என்று கேட்டாள்.

"என்ன?"என்று அவன் புரியாமல் முழிக்க மீரா வேண்டுமென்றே

"எதுக்கு எங்களை என்று பம்முர நேரே என்னை பற்றி யோசிச்சியா என்னு கேட்க வேண்டியது தானே."

"அட. சீ போடி.. நீ வேற நேரம் காலம் தெரியாம..."

"சரி இப்போ யார்தான் என்கிடுவை சந்திக்க போறது...."என்று ராபர்ட் கேட்க

"நானே போறேன்." என்றாள் ஜெனி எல்லோரும் அவளை அதிர்ச்சியோடு பார்த்தனர்.

மீண்டும் வருவான்……. Sanfara.A.L.F வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்