பிள்ளைகளும் பெற்றோரும்

பிள்ளைகள் இறைவெகுமதிகள் அவற்றின் உடல் உள மன ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி விருத்தி விடயத்தில் பெற்றோர் முதற்தர கவனம் கரிசனை செலுத்த வேண்டும். பிள்ளைகள் விடயத்தில் கவனமாகவும் நிதானமாகவும் நடுநிலையாகவும் நீதமாகவும் நடக்கவேண்டும்.

அந்த வகையில் இது பிள்ளைகளை பாடசாலையில் 2020 ல் சேர்ப்பதற்கான நேர்முகப்பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் (சில இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளன) மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் கல்வியை கற்பது தேடுவது சமயம் சார்ந்த கடமை போல அதைத்தாண்டி சர்வதேச சட்டத்தில் அது குழந்தைகள் பெறவேண்டிய கட்டாய உரிமை

அந்த வகையில்

  1. 5 வயது பூர்த்தியாகும் தருவாயில் உரிய பாடசாலைகளில் இணைத்தல்
  2. அதற்கான முன்னாயத்தங்களை செய்தல்
  3. காலம் தாழ்த்தாமல் விண்ணப்பங்களை பூரணமாக நிரப்பி அனுப்புதல்
  4. ஆவணங்களை தயார் செய்தல்
  5. அறிவுறுத்தல்களை பின்பற்றல்.
  6. உரிய கூட்டங்களுக்கு சமூகமளித்தல்
  7. பாடசாலையுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருத்தல்
  8. பிள்ளையின் கற்றலில் பூரண வழிகாட்டல். அவதானம் செலுத்தல்
  9. கற்றல் சூழலை உருவாக்கல்
  10. பிள்ளையின் நண்பர்கள் விடயத்தில் அதீத கவனம் செலுத்தல்

போன்ற அடிப்படை விடயங்களில் கூடிய கரிசனை செலுத்தவேண்டும்

M.M.A. Bisthamy BA (pera) PGDE (OUSL) வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்