ஆசிரியர்

ஆசிரியர் இல்லையெனில் வைத்தியர்கள் உருவாகியிருக்கமாட்டார்கள், கட்டடத்துறையில் துறைபோன கட்டடக்கலைஞர்கள் உருவாகியிருக்கமாட்டார்கள். ஆதலால் அவரை கண்ணியப்படுத்துங்கள் அவரிடம் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள். யாருடைய அறிவில் நோயுள்ளதோ அவரைத்தவிர வேறு யாரும் ஆசிரியை இழிவுபடுத்தமாட்டார்.

மடமையெனும் நோய் மற்றவரை கேவலப்படுத்துவதால் எம்மை குழிதோண்டி புதைத்துவிடும். அறிவு ஓர் ஒளி, அதன் மூலம் கண்ணியத்திற்கான உயிரோட்டம் உண்டு. எனது ஆசானே நீங்கள் என்றும் எனக்கு ஒளிவிளக்காக விளங்குவீர்கள் நீங்கள் என்னை விட்டும் தூரமாக உள்ள போதும், ஆன்மாக்களுக்கு உணர்வுகளை பரிமாற்றும் சக்தியுண்டு.

அரபு மொழியில்: கவிஞர் கலாநிதி வாஇல் ஜுஹா தமிழாக்கம்: அஸ்(z)ஹான் ஹனீபா வியூகம் வெளியீட்டு மையம்

கருத்துகள்