ஆழ்துளைக்குள் விழுந்த ஆண் விழுதே! உன் திருமுகம் காணாது இனி எப்படி விடியும் பொழுதே...
கைகள் தூக்கி நீ நிற்கும் போது கலங்கிப் போனதடா அடி வயிறு...
சிக்கித் தவிப்பது நீ மட்டுமல்ல இந்த தேசத்தின் மானமும்தான்...
மண்ணில் விழுந்த மழலையைக் காப்பாற்றாத இந்த தேசத்திற்கு விண்ணில் சாதனை வெட்கக் கேடு...
ஊடகங்களும் ஊர்மக்களும் உறவுகளும் உன் உயிர் காக்க துடித்து நிற்கிறோம் எழுந்து வாடா எங்கள் இளவலே!
சந்திராயன் சாதனை பேசுபவனை உன் பிஞ்சுக் காலால் எட்டி உதைக்க எழுந்து வாடா எம் இனத்தின் மாவீரா...
நீ தடுமாறி விழவில்லை விழுந்தது தமிழ்நாட்டின் தன்மானம்.. நீ எழவில்லை எனில் இங்கு எதற்கு விளம்பர விஞ்ஞானம்?
எழுந்து வா எம் விடியலே! எழுந்து வா எம் தளிரே ! உனைச் சுமந்த அன்னை வயிறு அழுகிறது...
கருத்துகள்
கருத்துரையிடுக