ஆசிரியர், வைத்தியர் மற்றும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் சிறந்த மனைவியான ஆயிஷா ரழி அவர்களை விடவா! இக்கபெண்கள் சமூக பணியில் இருக்கிறாகள். உஹது போரில் நபியை பாதுகாக்க போரிட்ட தைரியமுள்ள பெண்கள் எங்கே மறைந்திருக்கிறார்கள், முதலில் இஸ்லாத்தை ஏற்றதும் பெண்ணே! முதலில் உயிரை கொடுத்தவளும் பெண்ணே! எங்கே? நமது சுமையா, கதீஜா, உம்மு சுலைம், உம்மு அம்மாரா, ஆயிஷா!
அந்த பெண்களின் ஆளுமைகள் ஒரு சிலரில் புதைந்து வெளிப்பட்டதை அறிந்திருப்போம். ஆனால் தற்போது மந்த நிலையை காண்கிறோம். மீண்டும் உயிர் துடிப்புள்ள பெண்களை காணவாய்ப்பு வருமா?
பெண்கள் புரிந்து கொள்ளவேண்டிய சில கேள்விகள்
- இஸ்லாமிய உலகின் அறிஞர் மற்றும் சிந்தனையாளர் ஸைனப் அல் கஸ்ஸாலி போன்ற பெண்கள் எங்கே? மீண்டும் வருவாரா?
- நோபல் பரிசு பெற்ற முதல் அறபுப் பெண்மனி தவக்குல் கரமான் பத்திரிகையாளராக அரசியல் செயற்பாட்டாளராக மின்னுவதை கண்டுகளிக்கும் பெண்களா நீங்கள் அல்லது சாதிக்க துடிக்கும் பெண்களா?
- வெறும் 17 வயதிலேயே வைத்திய பட்டத்தை பெற்று காஸா கலவரத்தில் மிகவும் துனிச்சலோடு சிகிச்சை அளித்திக்கொண்டிருந்த தருணம் சுடப்பட்டு ஷஹிதானாரே அஸ்மா பெல்தாஜி எங்கே துணிச்சல் மிக்க அஸ்மாக்கள் எங்கே முதல் தர பயிற்று விப்பாளர் ஸய்யிதா ஸைத்?
- எங்கே சோமாளிய அகதியாக இருந்து தற்போது அமெரிக்காவின் சட்டசபை உறுப்பினராக திகழும் இஹ்ஸான் உமர்?
- யூசுப் அல் கர்ளாவியின் மகள் இல்ஹாம் அல் கர்ளாவி துடிப்பு திறன் அறிவுக்கடல் எங்கே காணமுடிகிறது
ஆனால் இந்தக்கால பெண்கள் அடுப்பு சாம்பல்ல புதைஞ்சி போயிராங்க, சோப் நுரையில மறைஞ்சி போயிராங்க, வீடு கூட்டிக்கூட்டி தும்புத்தடி போலவே தேஞ்சி போயிராங்க.
எனவே பெண்களும் படிக்கனும் சாதிக்கனும் ஆர்வமூட்டனும் எல்லாம் இஸ்லாமிய வறையறைகளோடு பாதை, மேடை ,கல்வி வளாகங்களில் அதுமாத்திரமல்லாது எழுத்து துறையிலும் பிரதிபலிக்கனும் அதவிட்டுட்டு சமையறையும் படுக்கையறையோடும் மாத்திரம் சுருங்காமல் சாதித்து காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ்
கருத்துகள்
கருத்துரையிடுக