நான், என்னால்,என்னுடையது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!!

நான், என்னால்,என்னுடையது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!! ஏனெனில் வரம்பு மீறியவர்கள் (இப்லீஸ்,காரூன், பிர்அவ்ன்) போன்றோர் இந்த வார்த்தைகளினால் தான் தற்பெருமை பேசி அல்லாஹ்வின் கோபத்திற்கும் அழிவுக்கும் உள்ளானார்கள்.

காரூன் கூறியது

(அதற்கு அவன்) கூறினான்: “ எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்! (குர்ஆன் 28:78)

இப்லீஸ் கூறியது

“நான்அவரை (ஆதமை) விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (குர்ஆன் 7:12)

பிர்அவ்ன் கூறியது

“என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா (குர்ஆன் 43:51)

Sabry Sahwi BA ® South Eastern University of srilanka

கருத்துகள்