The Meaning of Al Quran

நாம் உலகத்தில் எதுக்கு படைக்கப்பட்டோம்? என்ன செய்கிறோம்? எங்க போகிறோம்? தினமும் காலையில் எழும்புகிறோம் ஏன்? எதற்கு என்ற கேள்விகளும் இல்லாமல் அப்படியே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறோம். எந்தவொரு அடைவு லட்சியம் இல்லாமல் பிறந்தோம், வாழ்ந்தோம் ஒருநாள் மரணிப்போம் என்ற ஒரு குறுகிய சிந்தனையுடனே எமது வாழ்க்கை வெறும் அர்த்தமற்றதாக கழிகிறது.

தனது மனோ இச்சை எதைச் சொல்கிறதோ அதையே எமது வாழ்க்கையாக அமைக்கிறோம். அதற்காக எந்த சளிப்பும் இல்லாம முயற்சிக்கிறோம். இதுதான் வாழ்க்கையா? இதையா? இஸ்லாம் எதிர்பார்க்கிறது.

வாழ்க்கை சடவாத சிந்தனையாக சுயநலம் உள்ளவனாக மிருகத்தை விட மோசமானதாக அமைந்துள்ளதை கண்கூடாகக் காண்கிறோம். இப்படியெல்லாம் இருக்க ஒரு கேள்வி???

நாங்கள் ஒவ்வொருவரும் பெரியவர் ஆகிறோம் வேறு எதைக்கண்டோம்? சொத்து பணம் வீடு என்று கனவுலகில் மிதந்தாயே உனது மரணத்தின் பின் நீ அதைக் கொண்டு சென்றாயா? இல்லை பிறகு யார்? இன்னொருத்தன் தான் அனுபவிக்கிறான். அன்பு ,பாசம் குடும்பம் மனைவி என்று இருந்தார்களே! அவர்கள் அல்லது நீ மரணிப்பது அறியவில்லையா? எத்தனை உறவுகள் விட்டுச் சென்றதை பார்க்கவில்லையா? இப்படி வாழ்ந்த பின் எங்கள் மரணத்துக்குப் பின் மதிப்பு இருக்காது.

நான் யார்? என்னை படைத்தவன் யார்? எந்தக் குறையும் இல்லாமல் இவ்வளவு நேர்த்தியாக படைத்தானே சற்று சிந்திக்கவில்லையா? விஞ்ஞானமே அசந்து நிற்கும் அளவு அற்புதங்களை குர்ஆன் பேசுகின்றதை பிரட்டிப்பார்க்கவில்லையா? ஒரு முறையாவது இந்த குர்ஆனை பிரட்டிப்பார்த்தியா? என்ற கேள்விகளுக்கு எம்மிடம் பதில் இருக்கிறதா?

மனிதனின் மனோ இச்சைக்கு மத்தியில் இது பெரிதாக தோன்றுவது சாத்தியம் தான்!!!! எனவே இது தான் உண்மை என அறிந்தும் ஏன் பொடுபோக்கு? ஒவ்வொரு தனிமனிதனுக்குமான வாழ்க்கையின் ஒவ்வொன்றுக்கும் முழு வழிகாட்டியையும் தந்த "குர்ஆனை ஒரு முறையாவது வாசி ,உண்மையைச்சொல்லும் குர்ஆனை வாசி" "மறுமையில் கைசேதப்பட முன்", "மறுமை ஏடுகளை வாசிக்க முன் வாசி" வெற்றி பெறுவாய்.

Faslan Hashim BA ® South Eastern University of Sri Lanka.

கருத்துகள்