காற்று வீசும் திசை எல்லம் கட்டியணைத்து அமேசான் இன்று தீக்கிரையில் தத்தளிக்கிறது
காற்றை சுத்தம் செய்யும் நுரையீரல் போல் உலகில் உலகின் நுரையீரல் இன்றோ பற்றி எரிகிறது யார் செய்த கோலம் இது
தெரியவில்லை மானிடா நீ செய்தது என்று புரிந்தயே அழிந்து கொண்டிருப்பது அமேசான் நதிக்கரை மட்டுமல்ல இவ்வுலகமும் தான் சற்று புரிந்து கொள் மனிதா
அறிவில் உயர்ந்தவன் நீ என இவ்வுலகை உன் கையில் இறைவன் கொடுத்தால் ஐயறிவு மிருகங்கள் வாழும் இடங்களை அழித்து காசி எனும் காகிதத்தாலுக்காய் நீ போராடும் போராட்டத்தில் நீ மாண்டு தான் போவய்
என்று அறியாமல் போனது ஏனோ மனிதன் மேல் மனிதனுக்கே இரக்கம் இல்லை மனிதனுக்கு இரக்கம் காட்டி அந்த இயற்கை வளத்தை ஏன் தீ குழம்பாக்கினாய் மனிதா
எத்தனை மருத்துவ மூலிகைகள் மனிதன் வாழ சுமந்திருந்த அந்தக் காடு இன்று சுடு காடாய் மாற்றிவிட்டாய்
காற்றின் சூடு தணிந்து போனாலும் கரிக்கட்டையாய் எத்தனை மரங்கள் இன்று அழிந்து கிடக்கிறது அத்தனைக்கும் உயிர் கிடைக்குமா மீண்டும் ஆக்கவும் அழிக்கவும் பிறந்தவன் மனிதன் என்பதை நீ மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் மனிதா
உலகத்தைக் காப்பாற்ற உருவம் எடுத்த காடு இன்று உருக்குலைந்து போனதே மனிதனே மன்னித்துவிடு மண்ணோடு மண்ணாய் நான் போனாலும் என்னோடு நீயும் வருவாய்
கவிதை காதலன் அக்குறணை லஷாட்
கருத்துகள்
கருத்துரையிடுக