தாயின் மகிமை

அட்டை போன்ற உருவில் ஓட்டிகிடந்தோம் தாயின் வயிற்றில் எலும்பு எனும் எலும்புக் கூடாய் அமைத்து தோள் எனும் போர்வையால் போர்த்தி முந்நூறுநாள் தன்வயிற்றில் சுமந்து இவ்வுலகிற்கு என்னை அறிமுகம் செய்தது அம்மா தான்னட

தாய் வயிற்றில் வாழ்ந்த முந்நூறு நாட்களில் பாதிநாள் நாம் சுவாசித்தோமா இல்லை தன் சுவாசத்தில் பாதியை தந்தது தாய்யடா

தனக்காய் வாழ்ந்த நாட்களை விட தன் பிள்ளைகளைக்காய் வாழ்பவர்களே அம்மா

தன் பிள்ளைகளை ஊருடன் பெற்றால் தான் தாய் பால் எனும் பொக்கிஷம் உருவாகும் என்றது இன்றைய அறிவியல்

தன் பிள்ளைக்கென தன் இரத்தத்தை உருகி தன் பிள்ளைக்கென உருவாக்கிய பொக்கிஷம் முதற்பரிசு தாய் தந்த பால்தானட

நாம் எலும்புகளை ஒன்றுடன் ஒன்றாய் சேர்த்தால் வரும் வழியைய் நினைத்துப் பார் மனிதா இதையும் மிஞ்சிய வழியடா பிரசவ வலி அவ்வளவு வலியும் தாங்கித்தான் பிள்ளையின் முகம் பார்த்தவுடன் தன்வலி மறந்து புன்னகை பொழிகின்றாள் தாய்யடா

நம் மழலை மொழி கேட்டு ஆனந்த கண்ணீர் விடுவது அன்பின் சிகரம் தாய்யடா பெற்று வளர்த்த தன் பிள்ளைக்கு ஓர் துன்பம் என்ற போதும் கலங்கிப் போகும் தாயின் இதயமடா

தன் வயிற்றை பசியிலும் பட்டியிலும் போட்டுவிட்டு தன் பிள்ளைக்கு உணவளிப்பவன் தாய் தன்னடா

இத்தனைத் துன்பத்தையும் தாண்டி நம்மை சீராட்டி பாராட்டி பெற்று வளர்த்த நாம் தாய்க்கு என்ன செய்வது வாங்கிக்கொடு நற்பெயரை

கவிதை காதலன் அக்குரணை லஷாட்

கருத்துகள்