உலமாக்களின் சிந்தனைக்காக சில வரிகள்

உலமாக்களே! உங்கள் கண்ணியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள எந்த ஒரு அரசியல் கட்சியையும் தலைவனையும் ஆதரித்து பிரசங்கம் செய்ய வேண்டாம் அப்படி நடந்தால் தேரர்களை போல் எமது சமூகத்திலும் உலமாக்கள் பல பிரிவுகளாக பல கட்சிகளுக்கு பின்னால் போவதற்கு வாய்புள்ளது. ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு முழு சமூகமும் பாதிக்கப்பட கூடாதென்பதே எனது நோக்கம்.

அரசியலில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ள யாருக்கும் சுதந்திரம் உண்டு ஆனால் உலமாக்கள் இமாமாக நின்று தொழுகை நடாத்தும் போது பின்னால் நின்று தொழுபவருக்கு இவர் இந்த கட்சிக்காரர் என்ற சிந்தனை வராமலா இருக்கும்.

அரசியலில் ஈடுபட்டால் பொய் ஏமாற்றம் உருட்டு பெறட்டு சந்தர்ப்பத்தை பொறுத்து நடிப்பு இவையெல்லாம் இயல்பாகவே வந்து விடும் இது ஒரு உலமாவிற்கு பொருத்தமா? இதைப்பற்றி நாம் பேசினால் சில உலமா அடிமைகள் இங்கே உங்கள் பரம்பரை நாசமாகும் வாய் மூடி இருக்கும் படி உபதேசம் செய்வதை என்னவென்று சொல்வது.

பல மார்க்க விஷயங்களில் இன்னும் முடிவுகள் எடுக்க முடியாமல் தீர்ப்புகள் வழங்க முடியாதுள்ளது அதை விடவும் இந்த அரசியல் தான் முக்கியம் என்றால் அந்த நபரை ஒரு மார்க்க தலைவன் ஒரு இமாம் என்று எப்படி ஏற்றுக்கொள்வது.

இலங்கை அரசியலை பொறுத்தவரை பணமும் பதவியுமே முதலிடம் வகிக்கிறது இது அந்நிய சமூகத்திற்கு சரி வரும் ஆனால் இறைவனின் குர்ஆனை சுதந்து நபிகள் நாயகத்தின் நல் உபதேசத்தை தானும் ஏற்று பிறருக்கு கற்பிக்கும் ஒரு நபருக்கு பொருத்தமற்ற செயலாகும்.

மீண்டும் சொல்கிறேன் பிரச்சாரம் என்பதும் உபதேசம் என்பதும் வெவ்வேறு கோணத்தில் பார்க்க வேண்டியவை இதை புரிந்தும் புரியாதது போல் வக்காலத்து வாங்கும் தொண்டர்களே சிந்தியுங்கள்.

இவன் ஹசீம்.

[products]

கருத்துகள்