பூகம்பம்

மனிதனுக்கு எச்சரிக்கையுடும் பூமாதேவியின் அகோரம் பொறுமை இழந்த பூமாதேவியின் புதிய பரிணாமம் மனிதன் செய்யும் அட்டகாசம் பார்த்து வழி விட்டு சிரிக்கிறாள் பூமி மாதா முச்சக்கர நீ என்னிடம்தான் வரவேண்டும் என்று

பூமித்தாய் என் அழகிய மேனியில் படர்ந்து கிடக்கும் அவளின் ஆடையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து நீ மானிடன் செய்யும் நாளைய எதிர்காலத்தை மயானம் ஆக்கும் விலங்குகளின் அழிவைக் கண்டு பொறுமை இழந்த பூமித்தாய் சற்று கொந்தளித்து தான் பார்க்கிறாள் பூகம்பமாய்

என்றுமே மனிதனுக்கு தாலாட்டுப் பாடி மரங்களின் நிழலில் கண்ணுறங்கி இயற்கையின் சீற்றங்களை தனக்குள்ளே புதைத்து மனிதனுக்கு பல வேடங்கள் எடுத்த பூமித்தாய் இன்று சற்றே கோர தாண்டவம் ஆடுகிறாள் மனிதன் செய்யும் பகுத்தறிவுற்ற செயலால்

மனிதா சற்று சிந்தனை செய் உன் குழந்தைக்கோ உன் மேனி கோ சிறு கீறல் வந்தால் எப்படி துடித்து போகிறாய் உன் பூமித்தாய்க்கு எத்தனை துன்பத்தையும் துயரத்தையும் நீ கொடுக்கிறாய் என்று இனியாவது உன் பூமித்தாயை சற்று பாதுகாப்போம் நாளை எதிர்காலத்திற்கு சிறந்ததோர் உலகை நாம் விட்டுச் செல்ல பூகம்பம் கோர தாண்டவத்தில் இருந்து பூமித்தாய் சற்று விலகியே இருக்கட்டும்

கவிதை காதலன் அக்குரணை லஷாட்

[products]

கருத்துகள்