அன்றும் இன்றும் எம்முள்ளம்...

இறையோனின் இல்லமதில் பாங்கோசை குரலதிலே லயித்த எம்முள்ளம் - அன்று இசையெனும் சதிவலையில் சாத்தானின் தூண்டுதலில் சரிவதுதான் ஏனோ? - இன்று

ஸஹாபாக்கள் பலரதின் பண்பான சரிதையதில் பூரித்த எம்முள்ளம் - அன்று சினிமா நடிகர்களின் சீர்கெட்ட காட்சிதனில் மூழ்குவது ஏனோ? - இன்று

மாலை உதயமதில் மறையைப் புரட்டிட விரைந்த உள்ளம் - அன்று மஃரிப் ஆனதும் சீரியல் பக்கம் செல்வது ஏனோ?- இன்று

கூட்டான வாழ்வுதனை கூடியே வாழ்ந்த நாம் - அன்று தனிமையெனும் பாதையதை தேடியலைவதுதான் ஏனோ? - இன்று

பணம் செய்த சூழ்ச்சியா இது? - இல்லை நாகரீத்தின் மோகமா இது?

சற்றே நாம் மீட்டிடுவோம் சரித்திர வரலாற்றை!

J.Noorul Shifa (Jaffna)

கருத்துகள்