கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை கையேற்கவும் ஜம்மியத்துல் உலமா சபை ஒரு குழுவை நியமிக்கவும்
இலங்கையில் கடந்த இரு வாரங்களுக்குள் சுமார் 120 பேரை கொரோனா தொற்றி தற்போது இந்நோய் தாக்கம் காரணமாக இருவர் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு இந்நோய் தாக்கம் காரணமாக முஸ்லிம் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவரது ஜனாஸாக் கடமைகளை மேற்கொள்ள வேண்டிய விதமும் ஜம்மியத்துல் உலமா சபை மூலம் வழிகாட்டப்பட்டுள்ளது. அதாவது ஜனாஸாக்களை குளிப்பாட்ட வேண்டிய தேவையில்லை, ஜனாஸா தொழுகையை அவசரமாக தொழுவித்து முஸ்லிம் பொது மையவடியிலும் பிரத்தியேகமான ஓர் இடத்தில் ஆறு அடி ஆழமுள்ள கப்ரில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதே அவ் வழிகாட்டாலாகும்.
என்றாலும் இதுவரை மரணித்த இரு சகோதரர்களில் ஒரு முஸ்லிம் சகோதரரும் காணப்பட்டார். என்றாலும் முஸ்லிம்களின் கலாசாரத்திற்கு ஏற்ப முஸ்லிம் நபரின் ஜனாஸாவை நடாத்தும் வாய்ப்பு கிட்டவில்லை.
இதற்கான காரணத்தை ஆராய்கையில் ஒருவர் மரணித்தால் அவரின் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுவிடும். இதனால் குறித்த ஜனாஸாவை யார் பொறுப்பேற்பது என்ற சட்ட ரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனால் தான் நேற்றிரவுக்குள் (30.03.2020) குறித்த ஜனாஸா பொதுக் கலாசார்தின் கீழ் எரிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.
இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ சபையான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் பணிவான வேண்டுகோள் விடுகிறேன். இனிவரும் காலங்களில் தொடர்ந்தும் இவ்வாறு அவலங்கள் ஏற்படாது இருக்கும் பொருட்டு கொரோனா தாக்குதல் மூலம் மரணிக்கின்ற முஸ்லிம்களை கையேற்கவும் ஒரு குழுவை ஜம்மியத்துல் சபையின் கீழ் உருவாக்கவும்.
மேலும் இரவு நேரத்தில் முஸ்லிம் சமூகம் விரும்பாத எரித்தல் முறையில் ஜனாஸாவின் இறுதிக்கடமைகளை செய்ததுடன் இது பற்றிய புகைப்படங்களையும் சமூக வளைதளத்தில் நீர் கொழும்பு மேயர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவதும் தடை செய்ய வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக