ஒரு நாட்டு அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து வகையிலும் சலுகை வழங்கி வழிகாட்டல் வழங்கி ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்தி இராணுவம் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அயராத பாடுபட்டு ஒவ்வொரு நாளும் பல கூட்டங்கள் நடாத்தி மக்கள் நலனுக்காக பாடுபடும் போது உணராத எம் புத்தியற்ற மக்கள் அந்த சலுகைகளை உதாசீனப்படுத்தி ஊரடங்கு சட்டத்தை மீறி கேவலம் இலங்கை சமூகம் இன்று இத்தாலிக்கு ஒப்பிடப்படுகிறது.
ஆனால் அந்த சமூகத்தோடு இலங்கையை ஒப்பிடமுடியாது. காரணம் அவர்கள் நாட்டு சட்டத்தை மதித்தும் அவர்களுக்கு அந்த அவலம். ஆனால் நம்மவர் என்றுமே நாட்டு சட்டத்தை மிதித்தது தவிர மதித்தது கிடையாது.
அன்பு முஸ்லிம் சமூகமே! என் இஸ்லாமிய நெஞ்சங்களே! இன்னுமா நீங்கள் தஹஜ்ஜுத் தொழுகைக்கு எழவில்லை. இன்னுமா இறைவனை திக்ர் செய்யவில்லை. இன்னுமா அவனிடம் உதவி கோரவில்லை. அன்று முகம் மூட வேண்டாம் என்றவர்கள் இன்று முகத்திரை அணி என்கிறார்கள். அன்று உடலை மறைக்க வேண்டாம் என்றவர்கள் இன்று முழு உடலையும் மறைத்துள்ளார்கள். சஹ்ரானைவிட மோசமானது இந்த வைரஸ் எனும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. இன்னுமா நீ படைத்தவன் வல்லமையை உணரவில்லை..
கருத்துகள்
கருத்துரையிடுக