நித்யா… அத்தியாயம் -31

''பவி.... என்ன இதயே பாத்துட்டீக்ற...'' அவளது தோளில் கைகளை வைத்த லட்சுமி கேட்டாள்.

''இல்லக்கா.... இவ்ளோ பெய்ன்டிங்''

''ஓஹ்... பெயின்டிங் கிலாஸ் இங்க நடந்ததம்மா... சரியாக இன்னிக்கி ஒரு வருஷம் முடிஞ்சிருச்சி.'' அவளிடமிருந்து பெருமூச்சி வெளிப்பட்டது.

''யார் கிலாஸ் வெச்சது? ''

''அது வந்து...'' அவள் தயங்கினாள்.

''நித்யா...''

வினோத் சத்தமிட்டுக் கூறினான். ஆச்சரியமாக அவனையே பார்த்தவள் சட்டென அழ ஆரம்பித்தாள். அவளது தோளை இருகப் பற்றியவள்

''ஹேய் பவி... அழக்கூடாது... பாரு.'' என்றவளின் கண்களிலிருந்தும் கண்ணீர் ஓடியது.

''இல்லக்கா... நித்திக்கா இவ்ளோ நல்லவங்களா இருந்தும் அவ நம்மள விட்டு கடவுள் எடுத்துட்டாரே.''

மேலும் பேசமுடியாமல் அழுதவளை தடுக்க முடியாமல் மற்ற இருவரும் நின்றனர். திடீரேன கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

''சரி... அக்கா எப்டி செத்தா... சொல்லுங்க.''

''........''

அங்கு நிலவிய மௌனம் பிடிக்காதவள் வினோத்தினருகே வந்து,

''பிளீஸ்.... சொல்லுங்க?'' கெஞ்சிக் கேட்டவளை கண்களால் அளந்தவன்,

''தெரியாது...'' குரல் தழுதழுத்தது.

''வை? தெரியாதா?...'' கத்தினாள்.

''கத்தாதம்மா... பவித்ரா... உங்கக்காவ நான் தான் கொண்ணதே..''

இக்கொடிய வார்த்தைக்குரியவனைக் கண்டதும் திக் பிரமை பிடித்தவள் போலானாள்.

தொடரும்…. Rifdha Rifhan SEUSL

கருத்துகள்