"அல் அத்ல்" என்றால் நீதியாகும். இஸ்லாமும் நீதியாகும். அது நீதியையே போதிக்கின்றது. குழந்தைகளுக்கு அது கூறும் அகக் கருத்து பற்றி சிறந்த தெளிவை ஏற்படுத்த வேண்டியுள்ளோம்.
நீதி என்பது குறிப்பிட்ட ஒன்றை அதற்குரிய இடத்தில் வைப்பதாகும். அதற்குரிய உரிமையை அதற்கு வழங்குவதாகும்.
- அல்லாஹ்வை நிறுத்த வேண்டிய இடத்தில் இன்னொன்றை வைத்தல்.
- தாய் தந்தைக்குரிய இடத்தில் நண்பர்களை வைத்தல்.
- தொழுகின்ற நேரத்தில் வேறொன்றில் ஈடுபடுதல்.
- தூங்கும் நேரத்தில் இன்னொன்றை செய்தல்.
- படிக்க வேண்டிய காலத்தில் அதற்கு முரணான காரியத்தில் ஈடுபடுதல்.
இவ்வாறு செய்கின்ற போது அவற்றிற்குரிய நீதியை வழங்காமல் விடுகின்றோம். எனவே, குழந்தைகளுக்கு இது பற்றி முறையான தெளிவை வழங்கி உற்சாகப்படுத்தும் போது தாயை தந்தையை விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்.
அதேபோல் ஏனைய விடயங்களிலும் அவற்றிற்குரிய நிலைகளை வழங்கி எல்லைக் கோடுகளை அவதானித்து அவர்களது வாழ்வை வளம் பெறச் செய்வார்கள். அதற்குரிய முன்மாதிரி ஒழுங்குகளே எம்மால் ஆற்றப்பட வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக