சோதனை தான்

பொதுவாக இஸ்லாம் மனித வாழ்க்கையின் அத்துனை அம்சங்களிலும் வழிகாட்டுவது போன்று நோய்கள் குறித்தும் நோய் நிவாரணங்கள் குறித்தும், நோய்கள் தடுப்புமுறைகள் குறித்தும் மிக அதிகமாகவே வழிகாட்டி இருக்கின்றது.

தற்போதைய இந்த சூழலில் நாம் சில விஷயங்களை இஸ்லாமிய அடிப்படையில் தெளிவு படுத்திக் கொள்வது கடமையும் அவசியமும் ஆகும்.

எனவே இஸ்லாம் மனிதநேயத்திற்கு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு தத்தமது ஈமானிய சோதனையும் இறையச்சத்தையும் சோதிப்பதற்காக இவ்வுலகில் அல்லாஹ் அவனது ஆற்றலையும் சக்தியையும் கொண்டு வியப்பு வைக்கும் வடிவில் இச்சோதனையை உண்டு பண்ணியுள்ளான்.

இந்தச் சோதனைகளின் மூலம் பாதிக்கப்படுபவர்களின் மனோ நிலையும், ஈமானிய வலிமையும் சோதிக்கப்படுகின்றது என்பது தான் உண்மை. அந்த வகையில் அல்லாஹ் ஒரு மனிதனுக்கு வழங்குகின்ற நோயும் ஒரு வகையான சோதனையே.

ஒரு முஃமினுக்கு ஏற்படுகிற நோய் இறைவனின் அருளாகும். அவனின் பால் நெருங்குவதற்கு ஒரு துணைச் சாதனமும் ஆகும். மறுமையின் அந்தஸ்துகள் உயர்த்தப்படுவதற்குண்டான காரணியாகும்.

எனவே, பின்வருகிற அம்சங்களை நாம் கடைபிடிப்போமேயானால் அல்லாஹ் அவனுடைய தண்டயிலிருந்தும், கோபத்திலிருந்தும் நம்மை பாதுகாப்பான்.

  1. ஸுன்னாவின் படி வாழ்வது
  2. இஸ்திஃக்ஃபார் செய்வது
  3. இறைநம்பிக்கையில் உறுதியாய் இருப்பது
  4. இறைவனுக்கு நன்றி செலுத்துவது
  5. நற்காரியங்களை செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்
  6. தர்மம் செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்
  7. துஆ செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்
  8. ஆரோக்கியமான நிலையில் அல்லாஹ்வை நினைப்பது சோதனைகளில் இருந்து காக்கும்

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடிய வைரஸான கொரோனாவிலிருந்தும், இன்னும் கொடிய பல நோய்களிலிருந்தும் உங்களையும், என்னையும், உங்கள் குடும்பத்தாரையும், சந்ததிகளையும், என் குடும்பத்தார்கள், சந்ததிகளையும், முழு மனித, இஸ்லாமிய சமூகத்தையும் காத்தருள்வானாக!!! ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!!

KLM. Akram (Thableeqi) BA. (Hons) ® SEUSL Sammanthurai.
Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

கருத்துகள்