பாராளுமன்ற தேர்தல் 2020 மனசாட்சியின் பதிவு - 01

ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த பேரம் பேசி எமது உரிமைகளையும் உடைமைகளையும் பெற்றுக்கொண்ட காலம் மாறி இன்று எமது உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய ஒரு முக்கியமான தேர்தலை அண்மித்துக்கொண்டிருக்கின்றோம்.

இந்த தேர்தல் களத்தில் முக்கியமான பேசுபொருளே இனவாதம்தான். ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி இருசாராரும் எம்மை பந்தாடுவார்கள்.

இந்த காலகட்டத்தில் நாம் பல்வேறு பட்ட கோணங்களிலும் எமது பார்வையை செலுத்த வேண்டும்.

நான் இங்கு நான்கு விடயங்களை கோடிட்டு காட்டலாம் என நினைக்கிறேன். 1. எமது மக்களின் பாதுகாப்பு 2. எமது அடிப்படைஉரிமைகள் 3. எமது உடைமைகளுக்கான உத்தரவாதம் 4. எமது பிரதிநிதித்துவம்

மேலே கூறப்பட்ட விடயங்கள் தொடர்பாக தனியாக ஆராய வேண்டியுள்ளது. உங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவதன் மூலமாக ஆரோக்கியமான கலந்துரையாடலை ஆரம்பித்துவையுங்கள்.

நாச்சியாதீவு எம். சஹ்ரின் அஹமட்

கருத்துகள்