ஏதோ அசைவதை அவதானித்தவள் திரும்பிப் பார்த்தாள்.
''சிப்னா....'' என்று பஹீமா கூறியதுமே,
''என்ன மன்னிச்சிகோங்கோ நான் மொத அப்டி கத்தீச்ச படாது.''
அவளது கைகளை ஆதரவாகப் பற்றி,
''போ புள்ள, அத உடு எல்லம் அவன்ட நாட்டம் நலவுக்கு தான் பழய கதய இழுக்க விரும்பல்ல எப்டீக்கும் நான் தான் ஒங்கள்ட மன்னிப்பு கேக்கோணும். நான் தானே அவனபத்தி செல்லி'' அதற்கு மேல் பேசாமல் பஹீமா வாயை மூடிக் கொண்டாள்.
''நீ எந்துகன் மன்னிப்பு கேக்கோணும். எல்லம் அவன்ட நாட்டம். நீ அப்டி நெனச்சாத''
ஷரீபதாத்தா மெதுவாகக் கூறியதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள் சிப்னா.
''டிங்... டிங்...''
''சிப்னா.... ஓன்ட போன் தான் ரிங் ஆகிய பாரு...''
அவளது உம்மாவே தொலைபேசியையும் அவளிடம் கொண்டுவந்து கொடுத்தாள்.
''ஹலோ.... அஸ்ஸலாமு அலைக்கும்''
''வஅலைக்கும் ஸலாம்... சிப்னதாத்தா நான் பரீனா தாத்தாவ இன்டேகி பொண் பாக்க வார நீங்களும் வாங்கே. தாத்தா செல்ல சென்ன ஒங்கள்ட அவள் உம்மாவோட டௌனுக்கு பெய்த்த அந்தீக்கி வாங்கோ...''
மறுமுனையில் மூச்சுவிடாமல் பேசியவளை நினைக்கையில் புன்னகை மலர,
''ஹா... நான் வாரன்... ஒங்கட உமும்மா...''
''அவ மாமாங்கட ஊட்டுகு பெய்த்த... நாளே தான் வார நீங்க பயப்புடாம வாங்கோ''
''ஹா அப்ப சரி''
''தாரன் அது?''
ஷரீபதாத்தா முகத்தை சுருட்டிக் கொண்டு கேட்டார்.
''பரீனா பர்ஹாவ அந்தீக்கி பொண் பாக்க வாராம் என்னயும் வரட்டாம்.''
''நீ போறா?''
''ஓ இப்பவே மூனு மணி நாளுமணி மட்ல போகோணும்.'' உள்ளே சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி,
''நீ கவலபடாத. இன்ஷா அல்லாஹ் அவளுக்கு நல்ல ஒரு வாழ்க்கய அமச்சி கொடுப்பான்.'' பஹீமாவின் வார்த்தைகளை உணர்ந்தவள்,
''ஓ... நீ செல்லியது சரி...'' பெருமூச்சு விட்டவளையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தவள்,
''ஒனக்கிட்ட ஒன்டு செல்ல நெனச்ச... சிப்னாட செல்லாத... அவன் பஸால் வந்தாம் ஊட்டுக்கு''
கண்களை அகல விரித்தவள்,
''அப்டியா? அந்த குட்டியேம் கூட்டி கொண்டா? ''
''ஓ... பாரே கெட்டிதனத்த அவன்ட !''
''பேசாத அவன பத்தி... சிப்ன வார...''
''ஹா.... அப்ப நான் மறுக வாரன்...''
பஹீமா விடைபெற்றுச் செல்வதையே சிப்னா சந்தேகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
தொடரும். M.R.F Rifdha…..
கருத்துகள்
கருத்துரையிடுக